குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது 65 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.
அதுபோல பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவும் குடியரசுத் தலைவரை சந்தித்து வாழ்த்து கூறினார்.
இதையும் படிக்க | கலைஞர் கோட்ட திறப்பு விழா: நிதீஷ் குமார் வருகை ரத்து