மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
பிரதமர் மோடியை சந்திக்க நேரம் வழங்கப்படாததைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தின் 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதினர்.
பாஜகவின் பிரித்தாளும் அரசியலே மணிப்பூரின் இந்த நிலைக்கு காரணம் என எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் 120 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.