விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 156 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 156 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
மும்பை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 156 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 நாள்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.
இதையும் படிக்க | இந்திராதிகாரம் பிறந்த கதை! - 16 : ஜூன் 26, 1975 - அதிகாரத்தின் பிடியில்... அதிரடிகள்
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று திரும்புவதற்காக மொத்தம் 156 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவு ஜூன் 27 முதல் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.