திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு பொய்யுரைக்கும் பழக்கம் உள்ளதாக மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, திரிபுரா, உத்தரப் பிரதேசத்திலும் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். கோவாவில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றிடத்தைப் பெற்றனர். மேற்குவங்கத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொழில் துறையில் முன்னேற்றம் இல்லை. தொழில் முதலீடுக்கான இணக்கமான சூழலும் இல்லை. புதிய விமான நிலையங்கள், புதிய வேலைவாய்ப்பு என எதுவும் இல்லை.
ஆனாலும் தன்னுடைய சொந்த நிகழ்ச்சிகளுக்காக 500 கோடி வரை மம்தா செலவிடுகிறார். பணிநியமன முறைகேட்டில் சிக்கிய குற்றவாளியைக் காக்க நீதிமன்றத்தில் 300 கோடி செலவிடுகிறார் என குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.