இந்தியா

எல்லையில் ஊடுருவல்: 2 நாள்களில் 3 பாகிஸ்தானியர்கள் கைது!

DIN

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 நாள்களில் ஊடுருவ முயற்சி செய்த 3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று ஊடுருவல் முயற்சிகளும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் கைபெர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.

முன்னதாக புதன்கிழமை நள்ளிரவு அமிர்தசரஸ் அருகே ஒருவரும், வியாழக்கிழமை பிற்பகல் குர்தாஸ்பூர் அருகே ஒருவரும் சர்வதேச எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அவர்களை பிடித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு நாள்களில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதால், எல்லைப் பகுதிகளில் ரோந்து பணிகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT