இந்தியா

திருப்பதியில் 2 நாள்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து!

தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டி திருமலை ஏழுமலையான் கோயிலில் 2 நாள்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN


திருப்பதி: தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டி திருமலை ஏழுமலையான் கோயிலில் 2 நாள்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டு தெலுங்கு ஆண்டு பிறப்பு வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

யுகாதி ஆஸ்தானத்தையொட்டி வரும் 21 ஆம் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

கோயில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 

கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் யுகாதி பண்டிகையொட்டி 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், 22 ஆம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவ சேவை, ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

யுகாதி ஆஸ்தானம் நடைபெறும் அன்று கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கொண்டுவரப்படும் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது. 

காலை 7 மணி முதல் 9 மணிக்குள் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி சாமி வீதி உலா நடைபெறுகிறது.

மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT