கேரளத்தில் குடியரசுத் தலைவர் முர்மு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரள மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரள மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார்.
முர்முவை ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் கருடாவிற்கு புறப்பட்டனர்.
அவர் ஐஎன்ஸ் விக்ராந்தை பார்வையிட உள்ளார். அதன் பிறகு மாநில தலைநகருக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
நாளை கொச்சிக்குச் செல்லும் அவர் அங்கிருந்து லட்சத்தீவுக்கு செல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக கேரள மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.