ஓடும் லாரியில் ஆடுகளைத் திருடிய நபர்: காரில் தப்பிய வைரல் விடியோ
மகாராஷ்டிரத்தில் ஓடும் லாரியிலிருந்து ஆடுகளைத் திருடிய நபர் காரில் தப்பிச்சென்ற விடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரத்தில் ஓடும் லாரியிலிருந்து ஆடுகளைத் திருடிய நபர் காரில் தப்பிச்சென்ற விடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் இகாட்புரி நெடுஞ்சாலையில் லாரிகளில் ஆடுகள் விற்பனைக்கு ஏற்றிச்செல்லப்பட்டன. அப்போது ஓடும் லாரியில் ஏறிய நபர் ஒருவர் லாரியிலிருந்த ஆடுகளை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே போட்டு திருட முயன்றுள்ளார்.
5க்கும் மேற்பட்ட ஆடுகளை தூக்கி சாலையில் வீசிவிட்டு, லாரிக்கு பின்னால் சென்ற காரில் இறங்கு தப்பித்துள்ளார். இதனை வாகன ஓட்டி ஒருவர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.