கேஜரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டை கோடிக்கணக்கில் செலவழித்து சீரமைத்ததாகக் கூறி பாஜகவினர் இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டை கோடிக்கணக்கில் செலவழித்து சீரமைத்ததாகக் கூறி பாஜகவினர் இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பரவல் நேரத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தை புதுப்பிக்க தில்லி அரசு ரூ.45 கோடி செலவிட்டதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
ஏற்கெனவே இது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கேஜரிவாலின் வீட்டை சீரமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் உள்ள அவரின் வீட்டின் முன்பாக பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.