பிரஷாந்த் கிஷோர் (கோப்புப் படம்) 
இந்தியா

புது எதிர்காலம்: பிரஷாந்த் கிஷோருடன் இணைந்த ஐபிஎஸ் அதிகாரிகள்!

பிகாரில் அரசியல் மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள தோ்தல் வியூக வகுப்பாளா் பிரஷாந்த் கிஷோருடன் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்துள்ளனர்.

DIN

பிகாரில் அரசியல் மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள தோ்தல் வியூக வகுப்பாளா் பிரஷாந்த் கிஷோருடன் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்துள்ளனர்.

பாஜக, ஐக்கிய ஜனதா தளம், திமுக, திரிணமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தவர் பிரஷாந்த் கிஷோர்

சமீபத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றமாட்டேன் என அறிவித்து, புதிய அரசியல் மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் பிகாரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்முதல் ஜன் சூரஜ் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டார். 

பிகார் மாநிலத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்தில் அவர் மேற்கொண்டுள்ள இந்த பாதயாத்திரையில் (ஓய்வு பெற்றவர்கள் உள்பட) 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்துள்ளனர். 
 
மாநில அரசியல் தரம் மோசமடைந்துள்ளதாகவும், மாநிலத்தின் பெருமைகளை நிலைநிறுத்தும் வகையில் பிரஷாந்த் கிஷோரின் இந்த யாத்திரை அமையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் விதியை மாற்றி புதிய பாதையை அமைக்கும் நோக்கத்தில் பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்!

SCROLL FOR NEXT