இந்தியா

புது எதிர்காலம்: பிரஷாந்த் கிஷோருடன் இணைந்த ஐபிஎஸ் அதிகாரிகள்!

DIN

பிகாரில் அரசியல் மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள தோ்தல் வியூக வகுப்பாளா் பிரஷாந்த் கிஷோருடன் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்துள்ளனர்.

பாஜக, ஐக்கிய ஜனதா தளம், திமுக, திரிணமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தவர் பிரஷாந்த் கிஷோர்

சமீபத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றமாட்டேன் என அறிவித்து, புதிய அரசியல் மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் பிகாரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்முதல் ஜன் சூரஜ் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டார். 

பிகார் மாநிலத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்தில் அவர் மேற்கொண்டுள்ள இந்த பாதயாத்திரையில் (ஓய்வு பெற்றவர்கள் உள்பட) 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்துள்ளனர். 
 
மாநில அரசியல் தரம் மோசமடைந்துள்ளதாகவும், மாநிலத்தின் பெருமைகளை நிலைநிறுத்தும் வகையில் பிரஷாந்த் கிஷோரின் இந்த யாத்திரை அமையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் விதியை மாற்றி புதிய பாதையை அமைக்கும் நோக்கத்தில் பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT