ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை பிற்பகல் சந்திக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நான்கு நாள் பயணமாக புதன்கிழமை மாலை தேசிய தலைநகருக்கு வந்த பட்நாயக், ஜப்பான் பயணம் குறித்தும், கேந்திர பாடா மாவட்டத்தில் உள்ள நிப்பான் மெகா ஸ்டீல் ஆலை குறித்தும் பிரதமரிடம் பேச உள்ளார்.
மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு கூடுதல் வீடுகளை அனுமதிக்கவும், சில முக்கிய ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும் அவர் வலியுறுத்த உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.