தீவிரப் புயலாக நெருங்கும் மோக்கா: மியான்மர், வங்கதேசத்தில் மீட்புப் பணிகள்
கடற்கரையை நெருங்கிவரும் நிலையில், மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று கடலைக் கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் மோக்கா புயல் சின்னம் தீவிரமடைந்து, கடற்கரையை நெருங்கிவரும் நிலையில், மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகளும் தொடங்கியுள்ளன.
வங்கக் கடலில் தீவிரமடைந்து வரும் புயல் சின்னம் தற்போது வடக்கு நோக்கி நகர்கிறது. மியான்மரின் சித்வே - வங்கதேசத்தின் காஸ் பஜார் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த புயல் காரணமாக, கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் இருக்கும், கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு, புயல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.