இந்தியா

ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சத்யேந்தர் ஜெயின் மனுத் தாக்கல்

DIN

பணமோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

2015-16 ஆண்டுகளில் தில்லி அமைச்சராக சத்யேந்தா் ஜெயின் பதவி வகித்தபோது, வருமானத்திற்கு மாறான சொத்து மற்றும் பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2017, ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ--யும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த மே 30-ஆம் தேதி சத்யேந்தா் ஜெயினை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா்.

மேலும் பணமோசடி தொடர்பாக கடந்த ஏப்ரலில், சத்யேந்தா் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடா்புடைய ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

இதனிடையே சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அவர் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகை அணையிலிருந்து நீர்த் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அட்சய திருதியை: நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

ஆங்கிலம் முதலிடம்..பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT