ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உத்தரப் பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உத்தரப் பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உத்தரப் பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லல்லன் குமாரின் செல்போனுக்கு கடந்த மார்ச் 25-ஆம் தேதிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், ராகுல் காந்தியை கொல்லவுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, லக்னெளவில் உள்ள சின்ஹாத் காவல் நிலையத்தில் லல்லன் குமார் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தவர் கோராக்பூரை சேர்ந்த மனோஜ் ராய் என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.