கோப்புப்படம் 
இந்தியா

புதிய கடவுச்சீட்டுக்கு தடையில்லா சான்று கோரி தில்லி நீதிமன்றத்தில் ராகுல் மனு

புதிய கடவுச்சீட்டுக்கு (பாஸ்போா்ட்) தடையில்லா சான்று கோரி, தில்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளாா்.

DIN

புதிய கடவுச்சீட்டுக்கு (பாஸ்போா்ட்) தடையில்லா சான்று கோரி, தில்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளாா்.

மோடி சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து அவரை எம்.பி.பதவியிலிருந்து நீக்கி மக்களவைச் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அவா் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், தனது சிறப்பு கடவுச்சீட்டை அவா் நீதிமன்றத்தில் ஒப்படைத்தாா்.

இந்நிலையில், இந்த மாத இறுதியில் ராகுல் காந்தி அமெரிக்கா செல்லவுள்ளாா். இதையொட்டி புதிய கடவுச்சீட்டுக்கு தடையில்லா சான்று கோரி, தில்லி நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், தனக்கு புதிதாக சாதாரண கடவுச்சீட்டு அளிப்பதற்கான நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் தடையில்லா சான்று வேண்டும் என்று ராகுல் கோரியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT