கோப்புப்படம் 
இந்தியா

ஐபிஎஸ் வாகனத்தை சேதப்படுத்திய நடிகை மீது வழக்கு!

ஐபிஎஸ் அதிகாரியின் வாகனத்தை சேதப்படுத்தியதாக டோலிவுட் நடிகை மற்றும் அவரது ஆண் நண்பர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் ஜூப்ளி ஹில்ஸ் காவல்  துறையினர்.

DIN

ஹைதராபாத்: தெலங்கானாவில் ஐபிஎஸ் அதிகாரியின் வாகனத்தை சேதப்படுத்தியதாக தெலுங்கு நடிகை மற்றும் அவரது ஆண் நண்பர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகியோர் தாங்கள் வசிக்கும் ஆடம்பரமான ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்  நிறுத்தப்பட்டிருந்த துணை போலீஸ் கமிஷனர் ராகுல் ஹெக்டேவின் வாகனத்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக டி.சி.பி.யின் ஓட்டுநர் அளித்த புகாரின்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட  கார் நிறுத்துமிடத்தில் வழக்கமாக காரை நிறுத்துவதாக, நடிகையும் அவரது ஆண் நண்பரும் அடிக்கடி தங்கள் வழியைத் தடுப்பதாகவும் தலைமைக் காவலர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

காரை சேதப்படுத்திய பிறகு, நடிகை வேண்டுமென்றே வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த டிராபிக் கூம்புகளை உதைத்துள்ளார். இது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்றார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புகாரின் அடிப்படையில், மே 17ஆம் தேதியன்று காவல் துறையினர் நடிகை மற்றும் அவரது ஆண் நண்பர் மீது ஐபிசி பிரிவுகள் 341, 353, 279 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நியைில், விசாரணை அதிகாரி கடந்த திங்கள்கிழமையன்று டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது ஆண் நண்பருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீது சிஆர்பிசியின் பிரிவு 41-ஏ இன் கீழ் நோட்டீஸ் அனுப்பினர்.

தெலுங்கில் கிலாடி, ராமா பானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் டிம்பிள் ஹயாதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீா் தேங்காமலிருக்க தரைத் தளப் பணி

ஜல்லிக்கட்டு: பாலமேடு, அலங்காநல்லூரில் அமைச்சா் ஆய்வு

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகை!

மனைவியை தாக்கிய கணவா் கைது

இலையூரில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT