இந்தியா

ஜேபி பார்மா லாபம் 3.5% உயர்வு

DIN

புதுதில்லி: ஜே.பி. பார்மா நிறுவனம், மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 3.5 சதவீதம் அதிகரித்து ரூ.88 கோடி அதிகரித்துள்ளது.

2021-22 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.85 கோடியாக இருந்தது. 

2023ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.762 கோடியாக இருந்தது. இது 2022 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.625 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.3,149 கோடி வருவாய் ஈட்டியுள்ள நிலையில் இதே காலகட்டத்தில் வரிக்கு பிந்தைய லாபம் 386 கோடி ரூபாயில் இருந்து 410 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 6 சதவீத வளர்ச்சி என ஜே.பி.பார்மா தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 1.59 சதவீதம் சரிந்து ரூ.1,919.40 ரூபாயாக முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT