முகப்பு
கோப்புப் படம்.
இந்தியா

லக்னௌவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் அருகே ட்ரோன் பறக்கவிட்ட இளைஞர் கைது

முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இந்தியா

லக்னௌவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் அருகே ட்ரோன் பறக்கவிட்ட இளைஞர் கைது

முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:59 PM
கோப்புப் படம்.
பகிர்:

முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, ஹஸ்ரத்கஞ்ச் சந்திப்பில் உள்ள கஸ்மண்டா அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் வசிக்கும் இளைஞர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் நேற்றிரவு சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோனை பறக்கவிட்டார்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், அந்த இளைஞரை கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஹஸ்ரத்கஞ்ச் சந்திப்பில் வசிக்கும் அங்கித் சிங் என அடையாளம் காணப்பட்டார். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →