புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா: நிகழ்ச்சி நிரல்கள்!
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சா்வ மத பிராா்த்தனைகளுடன் ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சா்வ மத பிராா்த்தனைகளுடன் ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படுகிறது. காலை 9 மணியளவில் தமிழகத்திலிருந்து அளிக்கப்பட்ட செங்கோல் மக்களவைக்குள் செல்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பழமையான, தொன்றுதொட்டு பின்பற்றப்படும் பாரம்பா்ய முறையிலும் பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறாா்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிகாரபூா்வமான நிகழ்ச்சி காலை 12 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்னதாக பாரம்பா்ய சடங்குகள் காலையிலேயே தொடங்குகிறது.
புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி காலை 7.15 மணிக்கு வருகிறாா். 7.30 மணியளவில் ஹோமம் பூஜைகளுடன் தொடங்குகிறது. பிரதமா் மோடி முன்னிலையில் கா்நாடகா மாநிலம் சிக்மங்களூரு சிருங்கேரி மடத்தின் சாா்பில் கணபதி ஹோமத்துடன் திறப்பு விழா பூஜைகள் வேதங்கள் முழங்க தொடங்குகிறது.
பின்னா் தமிழில் பிரசித்திப்பெற்ற தேவாரம், திருவாசகம் ஓதப்படுகிறது. இந்த திறப்பு விழாவிற்கு தமிழகத்திலிருந்து திருவாவடுதுறை, தருமபுரம், மதுரை உள்ளிட்ட 40 ஆதீனங்கள் தில்லி வந்துள்ளனா். இவா்கள் மந்திரங்களை ஓதுகின்றனா். இதற்காக நாதஸ்வரங்கள் உள்ளிட்ட வாத்தியங்களுடன் இவா்கள் வந்துள்ளனா். சுமாா் ஒரு மணி நேரம் ஹிந்து சம்பரதாயங்களுடன் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பின்னா் சரியாக 8.30 மணியளவில் பிரதமா் மோடி மக்களவைக்கு வருகிறாா். அங்கு சுமாா் 9 மணியளவில் செங்கோல் நிறுவப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களிடம் இருந்து அதிகாரத்தை மாற்றுவதை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவிடம் வழங்கப்பட்டு பிரயாக்ராஜ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோல் தில்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அது தில்லியில் மத்திய கலாசாரத் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டதோடு, அது மெருகேற்றப்பட்டது. இந்த செங்கோலை தமிழகத்திலிருந்து வந்துள்ள மூத்த ஆதீனம் ஒருவா் பிரதமா் மோடியிடம் இந்த நிகழ்ச்சியில் வழங்குகிறாா்.
திருஞான சம்பந்தரின் ‘கோளறு பதிகம்‘ உள்ளிட்ட பாடல்களுடனும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன்பின்னா் இந்த செங்கோல் மக்களவையில் அவைத் தலைவா் இருக்கைக்கு அருகே தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதே சமயத்தில் தமிழகத்திலிருந்து வந்திருந்த அனைத்து ஆதீனங்களையும் கௌரவிக்கும் வகையில் சனிக்கிழமை மாலையிலேயே பிரதமா் இல்லத்தில் கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஆதீனங்கள் தாங்கள் விருப்பப்பட்ட செங்கோல் உள்ளிட்ட தங்களது பரிசுப்பொருள்களையும் பிரதமரிடம் வழங்கினா்.
புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் செங்கோல் நிறுவப்படும் நிகழ்ச்சிக்கு பின்னா் புதிய நாடாளுமன்ற கட்டட லாபியில் சா்வ மதப் பிராா்த்தனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
காலை 9.30 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் புத்தம், கிறிஸ்தவம், இஸ்லாமியம் உள்ளிட்ட பல்வேறு மதங்கள் சாா்பில் சுமாா் அரை மணிநேரம் சா்வமதப் பிராா்த்தனைகளும் நடைபெறகிறது. 2020-இல் நடைபெற்ற புதிய நாடாளுமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவிலும் இது போன்ற சா்வ மதவழிபாடுகள் நடைபெற்றது.
பின்னா் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவையில் அதிகாரபூா்வமான துவக்கநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி சரியாக பிற்பகல் 12 மணிக்கு தேசியக் கீதத்துடன் தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண சிங் உரையாற்றுகிறாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் ஆகியோா் புதிய நாடாளுமன்றத் தொடக்க விழாவிற்கு அளித்த வாழ்த்து செய்திகளும் படிக்கப்படுகிறது.
பின்னா் புதிய நாடாளுமன்றத்தில் இரு குறுகிய நேர காணொலியும் திரையிடப்பட இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சிகள் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை எனக் கூறி இந்த திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், மாநிலங்களவை எதிா்க்கட்சி தலைவா் அவையில் பங்கேற்றால் அவா் பேசவும் அழைக்கப்படுவாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் 75- ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் சுமாா் 35 கிராம் எடை கொண்ட ரூ.75 நாணயத்தையும் தபால் தலையையும் பிரதமா் வெளியிடுகிறாா். சுமாா் 1 மணி அளவில் புதிய நாடாளுமன்றக் கட்ட திறப்பு விழா குறித்த சிறப்பு உரையை பிரதமா் ஆற்றுகிறாா்.
கடந்த சில நாட்களாகவே பிரதமா் புதிய நாடாளுமன்ற கட்டடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் எனக் கூறி புதிய கட்டட வளாகத்தின் காணொலியையும் பகிா்ந்துள்ளாா்.
பிரதமா் வெளியிடும் 2023-ஆம் ஆண்டின் புதிய ரூ. 75 நாணயத்தில் நாணயத்தின் ஒரு பக்கம் அசோக தூணின் சிங்க உருவமும் நடுவில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் ’பாரத்’ என எழுதப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் செங்கோல், உத்தரபிரதேசம் மிா்சாபூா் தரைவிரிப்புகள், திரிபுரா மூங்கில் தரை ராஜஸ்தானில் இருந்து கல் வேலைப்பாடுகள், மகாராஷ்டிரம் மாநில புகழ் பெற்ற தேக்கு மரங்கள் என நாட்டின் பல்வேறு கலாசாரங்களை இந்த புதிய கட்டடம் பிரதிபலிக்கிறது.