முகப்பு
இந்தியா

புதிய நாடாளுமன்ற திறப்பை முடிசூட்டு விழாவாக பிரதமர் நினைக்கிறார்: ராகுல் காந்தி

புதிய நாடாளுமன்ற கட்டடம் மக்களின் குரல். ஆனால், பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முடிசூடும் விழாவாக நினைப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:59 PM
பகிர்:

 புதிய நாடாளுமன்ற கட்டடம் மக்களின் குரல். ஆனால், பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முடிசூடும் விழாவாக நினைப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த சிறிது நேரத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றம் என்பது மக்களின் குரல். பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழா போல் நினைத்துக் கொண்டிருக்கிறார் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.