கோப்புப் படம் 
இந்தியா

நாட்டிலேயே தில்லியில்தான் அதிக சாலை விபத்துகள்!

2022 தரவுகளின்படி 68 சதவிகித சாலை விபத்துகள் கிராமப்புறப் பகுதிகளில் நடந்துள்ளது. 32 சதவிகித விபத்துகள் நகர்புறங்களில் நடந்துள்ளது.

DIN

2022 தரவுகளின்படி நாட்டில் அதிக சாலை விபத்துகள் நடப்பது தில்லியில்தான் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவது, போதைப்பொருள், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்பாடு போன்றவையே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய சாலை போக்குவரத்துத் துறையில் பதிவாகியுள்ள சாலை விபத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், மற்ற நகரங்களைக் காட்டிலும் தில்லியில் அதிக சாலைவிபத்துகள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022 தரவுகளின்படி தில்லியில் 5,652 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் 4,680 விபத்துகள். மத்தியப் பிரதேசத்தின் ஜபால்பூரில் 4,046, கர்நாடகத்தின் பெங்களூருவில் 3,822, சென்னை 3,452, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் 3,313, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 2,687, ஹைதராபாத்தில் 2,516, கேரளத்தின் கொச்சியில் 2,432 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 

பதிவாகியுள்ள மொத்த விபத்துகளில் மேற்குறிப்பிட்ட 10 நகரங்களில் நடந்த விபத்துகள் மட்டும் 46.37 சதவிகிதமாக உள்ளது. 

இந்த சாலை விபத்துகளில் 17,089 உயிரிழந்துள்ளனர். 69,052 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

2022 தரவுகளின்படி 68 சதவிகித சாலை விபத்துகள் கிராமப்புறப் பகுதிகளில் நடந்துள்ளது. 32 சதவிகித விபத்துகள் நகர்புறங்களில் நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT