உத்தரப் பிரதேசத்தில் இருந்து தில்லி நோக்கிச் சென்ற சுஹைல்தேவ் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
காஜிப்பூரில் இருந்து ஆனந்த் விஹார் செல்லும் சுஹைல்தேவ் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு பிரக்யாராஜ் ரயில் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டது.
இதில், ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.