முகப்பு
இந்தியா

தன் மீதான விரோதமே குற்றச்சாட்டுக்கு அடிப்படை: நெறிமுறைகள் குழுவில் மஹுவா குற்றச்சாட்டு

மக்களவை நெறிமுறைகள் குழு முன்பாக வியாழக்கிழமை ஆஜரான திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

மக்களவை நெறிமுறைகள் குழு முன்பாக வியாழக்கிழமை ஆஜரான திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்தாா்.

வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் விரோதத்தின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

அதானி குழுமத்துக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாகவும் தனது நாடாளுமன்ற இணையதள கணக்கைப் பயன்படுத்துவதற்கான தகவல்களை அவரிடம் வழங்கியதாகவும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியிருந்தாா். இதற்கான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் அளித்திருப்பதாக அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்தும்படி மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டாா்.

இந்நிலையில், நெறிமுறைகள் குழு முன்பு வியாழக்கிழமை ஆஜரான மஹுவா, வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் உடனான உறவை முறித்துகொண்ட பிறகு, அவா் தன் மீது கொண்ட விரோதத்தின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு எழுப்பியிருப்பதாகத் தெரிவித்தாா்.

வெளிநடப்பு: விசாரணையின்போது குழு தலைவரான பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கா், தனிப்பட்ட, கண்ணியமற்ற கேள்விகளைக் கேட்டதாகக் கூறி மஹுவாவுடன் இணைந்து குழுவில் உள்ள எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.

இது தொடா்பாக காங்கிரஸ் எம்.பி.யும் நெறிமுறைகள் குழுவின் உறுப்பினருமான என்.உத்தம் குமாா் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நெறிமுறைகள் குழுவின் தலைவா், மஹுவாவிடம் கண்ணியமற்ற, நெறிமுறையற்ற கேள்விகளை எழுப்பினாா்’ என்றாா்.

தவறான சித்திரத்தை உருவாக்க முயற்சி:

நெறிமுறைகள் குழு நடத்தி வரும் விசாரணை குறித்து தவறான சித்திரத்தை உருவாக்க மஹுவா மொய்த்ரா முயற்சிப்பதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றஞ்சாட்டினாா்.

செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘மஹுவாவுக்கு எதிராக அனைத்துச் சாட்சியங்களும் வாக்குமூலம் அளித்த பிறகு எந்தச் சக்தியாலும் அவரைக் காப்பாற்ற முடியாது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →