இந்தியா

வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற மிஸோரம் முதல்வர்!

மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா வாக்களிக்க இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால், வாக்களிக்க முடியாமல் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினார்.

DIN

மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா வாக்களிக்க இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால், வாக்களிக்க முடியாமல் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினார்.

பின்னர் மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"என்னால் வாக்களிக்க முடியவில்லை; வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால், சிறிது நேரம் காத்திருந்தேன். ஆனால் உடனடியாக சரிசெய்யாததால், எனது தொகுதிக்கு சென்று காலை உணவுக்குப் பிறகு வாக்களிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மிஸோரமில் 8.57 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். 174 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா். கிறிஸ்தவா்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த மாநிலத்தில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி, எதிா்க்கட்சிகளான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 21 பேர் கொலை!

"ராணுவத்தைக் கைவிட்ட மோடி!": காங்கிரஸ் | செய்திகள்: சில வரிகளில் | 04.02.26

குகி சமூக முதல் பெண் துணை முதல்வர், நெம்சா கிப்கென் யார்?

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ருத்ர தாண்டவம்! தெ.ஆ.வுக்கு 241 ரன்கள் இலக்கு!

ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT