முகப்பு
இந்தியா

மங்களூர் : தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!

மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவி, விடுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:20 AM
கோப்புப்படம்
பகிர்:

மங்களூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவி கடந்த திங்கள் கிழமையன்று  தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

உயிரிழந்த மாணவியின் பெயர் பிரக்ருதி ஷெட்டி, வயது 20 என நகர காவல்துறை ஆணையர் அனுபம் அகர்வால் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

காலை 3 மணியளவில் விடுதிக் கட்டத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது அறையிலிருந்து மாணவியின் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் அதில் 'அவள் வாழ்கையில் விரக்தியடைந்துவிட்டாள்' என எழுதியிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேலும் காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.