கோப்புப்படம் 
இந்தியா

பிரதமர் மோடி, உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

பிரதமர் மோடி, உத்தப் பிரதேச முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

DIN


பிரதமர் மோடி, உத்தப் பிரதேச முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தாவூத் இப்ராகிமின் கும்பல் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கக் கூறியதாக செவ்வாயன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மும்பையில் உள்ள கிழக்கு சியோனில் வசிக்கும் கம்ரான் அமீர் கான்(29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குற்றம் சாட்டப்பட்டவர் மும்பையின் ஜே ஜே மருத்துவமனையில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டியுள்ளார். நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்றதால் மருத்துவர்களின் மருத்துவப் பரிசோதனை தாமதமாகி வருவதும் பின்னர் கண்டறியப்பட்டது. 

கம்ரான் அமீர் கான் மனநிலை சரியில்லாதவர் என்றும் இதற்கு முன்பு உ.பி முதல்வர் ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT