முகப்பு
இந்தியா

யோகி ஆதித்யநாத்துக்கு புல்டோசரில் மலர் தூவி வரவேற்பு

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு ராஜஸ்தானில் புல்டோசரில் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:24 AM
பகிர்:

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு ராஜஸ்தானில் புல்டோசரில் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராஜஸ்தானில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் (நவ. 25) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில்,  யோகி ஆதித்யநாத்  ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஜோத்வாரா தொகுதியின் பாஜக வேட்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு புல்டோசரில் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.