பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் கார்த்திகேயன் பாண்டியன் 
இந்தியா

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் கார்த்திகேயன் பாண்டியன்!

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்தார்.

DIN

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்தார்.

2000-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்தவர் வி. கார்த்திகேயன் பாண்டியன் ஐஏஎஸ். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் 23 ஆண்டு கால ஆட்சியில், பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் பட்நாயக்குடன் காணப்படும் இவர், அமைச்சர்கள் கூட, முதல்வரை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் கொண்டவராக வலம்வந்தார்.

மேலும், நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்த நிலையில், கடந்த மாதம் ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, மாநில அமைச்சர் அங்கம் வகிக்கக் கூடிய “நவீன ஒடிசா” திட்டத்தின் தலைவர் பதவியை கார்த்திகேயன் பாண்டியனுக்கு நவீன் பட்நாயக் வழங்கினார்.

இந்த நிலையில், நவீன் பட்நாயக் முன்னிலையில் திங்கள்கிழமை காலை பிஜு ஜனதா தள கட்சியில் அதிகாரப்பூர்வமாக கார்த்திகேயன் பாண்டியன் இணைந்தார்.

இந்த நிகழ்வில், கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT