இந்தியா

மிக்ஜம் புயல்: வட தமிழகத்தில் டிச.3ல் புயலாக வலுப்பெறும்!

வட தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

DIN

வட தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுவடைந்து  தீவிர காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நீடித்து வருகின்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். 

அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 03.12.23ல் புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04.12.23 அதிகாலை வடதமிழகம்-தெற்கு ஆந்திர கடலோரப்பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புதிதாக உருவாகியுள்ள புயலுக்கு மிக்ஜம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மிக்ஜம் புயல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT