கோப்புப் படம் 
இந்தியா

மகாராஷ்டிரம்: மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலியானார். 

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலியானார்.
மகாராஷ்டிர மாநிலம், பிதர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் மகாதேவ் சக்ரே. 16 வயதான அந்த இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள லத்தூர் வந்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் லட்சுமி காலனியில் உள்ள 3மாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்தார். 
அப்போது எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியில் இருந்து சக்ரே தவறி விழுந்தார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சக்ரே சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்து மரணம் என சிவாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT