பெங்களூரு தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!
பெங்களூருவில் உள்ள தொழிலதிபரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.
பெங்களூருவில் உள்ள தொழிலதிபரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.
கசவனஹள்ளி பகுதியில் உள்ள தொழிலதிபரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று காலை சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. தொழிலதிபர் இரண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர் என்றும், அவர் அந்த நிறுவனங்களில் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநராகப் பதவி வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் ஒரே நேரத்தில் எட்டு வாகனங்களில் வந்து சோதனையை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
கடந்த வாரம் முதல் இதுவரை ரூ.80 கோடிக்கும் அதிகமான பணம் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
முந்தைய பாஜக அரசுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் கட்டணத்தை உயர்த்திய ஒப்பந்ததாரருக்குச் சொந்தமான குடியிருப்பில் ரூ.40 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கட்டடத் தொழிலாளியின் குடியிருப்பு ஒன்றில் மேலும் ரூ.40 கோடி ரொக்கம் கைப்பற்றினர்.
ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நிதிக்காகப் பணம் வசூலிக்கப்படுவதாக பாஜக மற்றும் ஜேடி(எஸ்) கட்சிகள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நேரடியாகக் குற்றம் சாட்டி வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.