இந்தியா

எந்த கிரிக்கெட் வீரருக்கும் பரிசளிப்பதாக அறிவிக்கவில்லை: ரத்தன் டாடா மறுப்பு!

எந்த கிரிக்கெட் வீரருக்கும் பரிசளிப்பதாக அறிவிக்கவில்லை, தவறான வாட்சப் ஃபார்வர்டுகளை நம்பவேண்டாம் என தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

DIN

தொழிலதிபர் ரத்தன் டாடா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கோ அல்லது எந்த கிரிக்கெட் வீரருக்கோ பரிசளிப்பதாக தான் எந்தவொரு அறிவிப்பும் செய்யவில்லை என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

இதுகுறித்து ரத்தன் டாடா அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் வெகுமதி வழங்குவது பற்றி ஐசிசி அல்லது பிற கிரிக்கெட் கவுன்சிலிடம் நான் கூறவில்லை. கிரிக்கெட்டுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. எனது அதிகாரப்பூர்வ தளங்களை தவிர்த்து வரும் வாட்சப் ஃபார்வர்டுகள் மற்றும் விடியோக்களை நம்பவேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கானுக்கு ரத்தன் டாடா ரூ.10 கோடி பரிசுத்தொகை அறிவித்ததாக போலியான வாட்சப் ஃபார்வர்டுகளும், விடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து ரத்தன் டாடா இந்தப் பதிவினை பதிவிட்டுள்ளார். 

திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் 50 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்: 2007 முதல் 2024 வரை!

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தைப் பந்தாடிய ஆப்கானிஸ்தான்!

ஜெகதீசன் அபார சதம்! டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

இனி 1.13 மணி நேரத்தில் சென்னை - பெங்களூரு பயணம்: அஷ்வினி வைஷ்ணவ்

எம்.எம். நரவனே புத்தகத்தில் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி : பிரியங்கா காந்தி பேச்சு

SCROLL FOR NEXT