இந்தியா

ஆதித்யா எல்-1: திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!

ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். 

DIN

ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். 

நிலவுக்கு சந்திரயான் -3 விண்கலம் அனுப்பப்பட்டதையடுத்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ தயாராக உள்ளது. 

இதற்கான கவுண்ட் டவுன் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தொடங்கியுள்ள நிலையில் நாளை(செப். 2) காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் சுமாா் 1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 

இதையொட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். ஆதித்யா-எல்1 விண்கலத்தின் சிறிய மாதிரியை வைத்து வழிபாடு செய்தனர். 

முன்னதாக, சந்திரயான் -3 விண்ணில் செலுத்துவதற்கு முன்பும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT