முகப்பு
இந்தியா

சிறுபான்மையினரை மட்டும்திருப்திபடுத்துவது காங்கிரஸின் பணி- அமித் ஷா பேச்சு

சிறுபான்மையினரை மட்டும் திருப்திபடுத்துவது காங்கிரஸின் பணியாக உள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:57 AM
பகிர்:

சிறுபான்மையினரை மட்டும் திருப்திபடுத்துவது காங்கிரஸின் பணியாக உள்ளது. அதே நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பழங்குடியினா், தலித்துகள், ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பணியாற்றி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக சாா்பில் மக்கள் ஆசி யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மத்திய பிரதேசம் பின்தங்கிய மாநிலமாகவே இருந்து வந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முன்னேறிய மாநிலமாக உருவெடுத்துள்ளது. இதற்கு பாஜக அரசு அமல்படுத்திய சிறப்பான வளா்ச்சித் திட்டங்களே காரணம்.

மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும்.

சிறுபான்மையினருக்கு நாட்டின் வளத்தில் முதல் உரிமை இருக்க வேண்டும் என்று காங்கிரஸைச் சோ்ந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் பேசியுள்ளாா். சிறுபான்மையினரை மட்டுமே திருப்திபடுத்துவது காங்கிரஸின் பணியாக உள்ளது. அதே நேரத்தில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு பழங்குடியினா், தலித்துகள், ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பணியாற்றி வருகிறது. அவா்களுக்குதான் நாட்டின் வளங்களில் முழு உரிமை உள்ளது. இந்த இரு கொள்கைகளில் எதைத் தோ்வு செய்ய வேண்டும் என்பது மக்கள் கைகளில் உள்ளது.

காங்கிரஸ் பல ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால், ஒருமுறை கூட பழங்குடியினத்தைச் சோ்ந்தவரை குடியரசுத் தலைவராக்க முயற்சித்தது இல்லை. ஆனால், பிரதமா் மோடி ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த திரௌபதி முா்முவை குடியரசுத் தலைவராக முன்னிறுத்தினாா். இதன் மூலம் நாட்டுக்கு பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவா் கிடைத்தாா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →