அசாம் சாலை விபத்தில் 7 பேர் பலி, 12 பேர் காயம்!
அசாம் மாநிலம் டின்சுகியாவில் நேற்றிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர்.
அசாம் மாநிலம் டின்சுகியாவில் நேற்றிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர்.
டின்சுகியா மாவட்டத்தின் தும்டுமாவில் உள்ள சந்தையிலிருந்து 10-க்கும் மேற்பட்டோர் டாடா மேஜிக் வாகனத்தில் பயணித்தபோது, வேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் சிக்சி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரரணை மேற்கொண்டு வருகின்றனர்.