இந்தியா

தெலங்கானாவில் கர்ப்பிணி பெண்ணை டோலியில் சுமந்து சென்ற குடும்பத்தினர்!

சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் தங்கள் கிராமத்தை அடைய முடியாததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காட்டுப் பகுதி வழியாக 'டோலி'யில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தெலங்கானாவில் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் தங்கள் கிராமத்தை அடைய முடியாததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காட்டுப் பகுதி வழியாக 'டோலி'யில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் 'டோலி'யில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்தபடி சத்தியநாராயணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த பெண் சுகாதார மையத்திலிருந்து ஆம்புலன்சில் பத்ராச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT