இந்தியா

ஹரியாணாவில் இந்த ஆண்டு 200 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்: முதல்வர் மனோகர் லால் கத்தார்

ஹரியாணாவில் இந்த ஆண்டு 200 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார்.  

DIN

ஹரியாணாவில் இந்த ஆண்டு 200 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து இளைஞர்களுடன் உரைறயாற்றி அவர், ஜனவரி 2019 முதல் தற்போது வரை மாநிலத்தில் 1,450 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 31,217 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 200 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். 
அரசுத் துறையில், 14 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 56,000 அரசு வேலைகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு வேலைகள் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. 
ஹரியாணா திறன் மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் 80,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம் இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் தொழில் சார்ந்த கல்வியை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT