முகப்பு
இந்தியா

அக்ஷர்தாம் கோயிலுக்குச் செல்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தில்லி அக்ஷர்தாம் கோயிலுக்குச் செல்கிறார். 

Updated On : 9 செப்டம்பர் 2023, 5:07 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தில்லி அக்ஷர்தாம் கோயிலுக்குச் செல்கிறார். 

இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமை(செப். 9, 10) என இரு நாள்கள் நடைபெறுகிறது. 

இதில் கலந்துகொள்வதற்காக ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சனிக்கிழமையே தலைநகர் தில்லிக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் பிரகதி அரங்கத்தில் கூட்டம் தொடங்கியது. பாரத மண்டபம் பகுதியில் அனைத்து நாட்டின் தலைவர்களையும் பிரதமர் மோடி வரவேற்றார். 

Advertisement

Advertisement

இந்நிலையில், தில்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு நாளை செல்ல உள்ளதாக அவர் கூறினார். 

பிரதமர் மோடி மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாவும், ஜி20 மாநாடு மகத்தான வெற்றியடையச் செய்வதில் அவருக்கு ஆதரவளிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments