இந்தியா

பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து: 16 மாணவர்கள் மாயம்!

பிகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 16 மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

பிகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 16 மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முசாபர்பூர் மாவட்டம் மதுபூர்பட்டி கேட் என்ற பகுதியில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பாக்மதி ஆற்றை கடக்க 33 மாணவர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக கிராம மக்கள் இணைந்து 17 மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், 16 மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்றடைந்தனர். இருப்பினும், மீட்புப் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் இன்னும் வந்து சேராததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பேசிய நிதீஷ் குமார், மூத்த அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு சென்று தேவையான ஏற்பாடுகளை செய்து தர உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT