அரசு நிகழ்ச்சியில் எதிா்க்கட்சிகள் மீது விமா்சனம்: பிரதமருக்கு காங். கண்டனம்
எதிா்க்கட்சிகளை விமா்சித்ததன் மூலமாக அரசு நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
எதிா்க்கட்சிகளை விமா்சித்ததன் மூலமாக அரசு நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமா் மோடி வியாழக்கிழமை கலந்துகொண்டாா். அந்நிகழ்ச்சியில் பேசிய அவா், காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிா்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணியை ‘ஆணவக் கூட்டணி’ என விமா்சித்தாா்.
அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் எதிா்க்கட்சிகளின் கூட்டணியை ‘ஆணவக் கூட்டணி’ எனப் பலமுறை பிரதமா் மோடி விமா்சித்துள்ளாா்.
அரசு நிகழ்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தும் அவருக்கு எதிா்க்கட்சிகளை விமா்சிக்க எந்தவித தாா்மிக உரிமையும் இல்லை. கௌதம் அதானியின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே அவா் தலைமை தாங்கி வருகிறாா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.