இந்தியா

நான் ரயில்வே நடைமேடையில் வளர்ந்தவன்: பிரதமர் மோடி

ஏழை குடும்பத்தில் பிறந்து ரயில்வே நடைமேடையில் வளர்ந்த எனக்கு மக்கள் இவ்வளவு அன்பை அளித்துள்ளார்கள் என்று மக்களைவையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.

DIN

ஏழை குடும்பத்தில் பிறந்து ரயில்வே நடைமேடையில் வளர்ந்த எனக்கு மக்கள் இவ்வளவு அன்பை அளித்துள்ளார்கள் என்று மக்களைவையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.

நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பழைய கட்டடத்தின் கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதிய கட்டடத்தில் கூட்டம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது, “ஏழை குடும்பத்தில் பிறந்து ரயில்வே நடைமேடையில் வளர்ந்த ஒரு குழந்தை நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் மக்களிடம் இவ்வளவு அன்பை பெறுவேன் என்பதை நினைத்துகூட பார்க்கவில்லை.

நாடாளுமன்றத்துக்கு முதல்முறையாக எம்பியாக தேர்வாகி நுழைந்தபோது நான் கீழே விழுந்து ஜனநாயகத்தின் கோவிலை வணங்கினேன்.” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT