இந்தியா

நான் ரயில்வே நடைமேடையில் வளர்ந்தவன்: பிரதமர் மோடி

ஏழை குடும்பத்தில் பிறந்து ரயில்வே நடைமேடையில் வளர்ந்த எனக்கு மக்கள் இவ்வளவு அன்பை அளித்துள்ளார்கள் என்று மக்களைவையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.

DIN

ஏழை குடும்பத்தில் பிறந்து ரயில்வே நடைமேடையில் வளர்ந்த எனக்கு மக்கள் இவ்வளவு அன்பை அளித்துள்ளார்கள் என்று மக்களைவையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.

நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பழைய கட்டடத்தின் கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதிய கட்டடத்தில் கூட்டம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது, “ஏழை குடும்பத்தில் பிறந்து ரயில்வே நடைமேடையில் வளர்ந்த ஒரு குழந்தை நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் மக்களிடம் இவ்வளவு அன்பை பெறுவேன் என்பதை நினைத்துகூட பார்க்கவில்லை.

நாடாளுமன்றத்துக்கு முதல்முறையாக எம்பியாக தேர்வாகி நுழைந்தபோது நான் கீழே விழுந்து ஜனநாயகத்தின் கோவிலை வணங்கினேன்.” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT