கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கே 
இந்தியா

இந்தியாவைவிட்டு வெளியேற கனடா தூதருக்கு உத்தரவு!

இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு கனடா தூதரக அதிகாரிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு கனடா தூதரக அதிகாரிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நேரில் ஆஜராக மத்திய வெளியுறவுத் துறை சம்மன் வழங்கியிருந்தது.

 இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் இன்று காலை ஆஜரான கேமரூனை 5 நாள்களுக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

ஐடிஐ-யில் பயிற்சி முடித்தவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

விசாரணைக்கு காவல் அதிகாரிகள் துப்பாக்கியுடன் செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

‘கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன’

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு இறுதி வாய்ப்பு

SCROLL FOR NEXT