கோப்புப்படம் 
இந்தியா

ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற நாளை(செப்.30) கடைசி நாள்!

மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதன்படி, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன்(செப். 30) நிறைவடைகிறது.

DIN

மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதன்படி, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன்(செப். 30) நிறைவடைகிறது.

கடந்த  2016 ஆம் ஆண்டு ரூ. 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தபோது 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் 2 ஆவது பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக 2,000 ரூபாய்  நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக கடந்த மே மாதம் 19 ஆம் தேதி ஆர்பிஐ அறிவித்தது. 

2,000 ரூபாய்  நோட்டுகளை எந்தவித படிவம் மற்றும் அடையாள அட்டையின்றி வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவித்தது. 

அதன்படி, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அல்லது மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணமில்லை என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது. எனவே, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன்(செப். 30) நிறைவடைகிறது.

அதனால் 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் இன்றும் நாளையும் வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள். 

செப்டம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.3.32 லட்சம் கோடி மதிப்பிலான 93 சதவிகித 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

துயர் நீக்கிய தலம்!

ம.பி.யில் எங்கெல்லாம் சுற்றுலா செல்லலாம்? சுற்றுலாத் துறை செயலர்!

அதெல்லாம் பழைய செய்தி! EPS பேச்சுக்கு OPS பதில்!

இடைக்கால பட்ஜெட்: பிப். 5ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

SCROLL FOR NEXT