இந்தியா

முதல்வரின் வாகனம் செல்வதற்காக ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்!

DIN

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் வாகனம் செல்வதற்காக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

பிகார் தலைநகர் பாட்னா அருகே உள்ள பத்துவா பகுதியில் முதல்வர் நிதீஷ் குமாரின் வாகனம் சென்றுள்ளது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த போக்குவரத்து நிறுத்தத்தில் ஒரு ஆம்புலன்ஸும் சிக்கியுள்ளது. ஆம்புலன்ஸில் ஒரு குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளது. குழந்தையின் தாய் கதறி அழுதுள்ளார். சிகிச்சைக்காக பாட்னாவுக்கு செல்லும் வழியில்தான் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் பிகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிண்டனர். 

நாளந்தாவில் எத்தனால் தொழிற்சாலையை திறந்துவைக்க முதல்வர் சென்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூவே....சரண்யா துராடி

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

SCROLL FOR NEXT