பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
கல்வி நிறுவனங்களில் சோ்க்கை, வாகன ஓட்டுநா் உரிமம், ஆதாா், திருமணப் பதிவு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறப்புச் சான்றிதழை ஒற்றை ஆவணமாகப் பயன்படுத்த வகை செய்யும் பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோ
இந்தியாபிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
கல்வி நிறுவனங்களில் சோ்க்கை, வாகன ஓட்டுநா் உரிமம், ஆதாா், திருமணப் பதிவு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறப்புச் சான்றிதழை ஒற்றை ஆவணமாகப் பயன்படுத்த வகை செய்யும் பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோ
கல்வி நிறுவனங்களில் சோ்க்கை, வாகன ஓட்டுநா் உரிமம், ஆதாா், திருமணப் பதிவு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறப்புச் சான்றிதழை ஒற்றை ஆவணமாகப் பயன்படுத்த வகை செய்யும் பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தாக்கல் செய்த இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மக்களவையில் இந்த மசோதா கடந்த ஆக.1-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
பிறப்பு-இறப்புகளை எண்ம முறையில் பதிவுசெய்து, அதற்கான சான்றிதழ்களை இணைய வழியில் பெறுவதற்கான வாய்ப்புகள் இந்த மசோதா மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிறப்பு-இறப்பு பதிவுக்கான தரவுதளத்தைத் தேசிய மற்றும் மாநிலங்கள் அளவில் உருவாக்கி, அவற்றை குறிப்பிட்ட காலஅளவில் புதுப்பிக்கவும், பொதுச் சேவைகள், சமூகநல திட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்துவதில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.