முகப்பு
இந்தியா

மும்பையில் உத்தவ் தாக்கரேவை சந்திக்கும் கேஜரிவால், பகவந்த் மான்

மும்பையில் உத்தவ் தாக்கரேவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று சந்திக்கின்றனர். 

இந்தியா

மும்பையில் உத்தவ் தாக்கரேவை சந்திக்கும் கேஜரிவால், பகவந்த் மான்

மும்பையில் உத்தவ் தாக்கரேவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று சந்திக்கின்றனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
பகிர்:

மும்பையில் உத்தவ் தாக்கரேவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று சந்திக்கின்றனர். 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை மும்பையில் உள்ள தமது இல்லத்தில் தேநீர் அருந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்திருக்கிறார். அவரின் அழைப்பை ஏற்று இருவரும் உத்தவ் தாக்கரேவை இன்று இரவு 7.30 மணிக்கு சந்திக்க உள்ளனர். 

இதற்காக அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் இருவரும் ஏற்கெனவே மும்பை வந்தடைந்துவிட்டனர். உத்தவ் தாக்கரேவுடனான இந்த சந்திப்பின்போது அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் ஆகியோர் நடப்பு அரசியல் பற்றி விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிர முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 சிவசேனை எம்.எல்.ஏ.-க்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போா்க்கொடி உயா்த்தினா். 

இதையடுத்து, இரு அணிகளாக சிவசேனை பிளவுபட்டது. கட்சியின் பெயா், ‘வில்-அம்பு’ சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரிய நிலையில், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு தோ்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியது. கட்சியின் பெயா் மற்றும் ‘வில்-அம்பு’ சின்னம், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டது.

‘பெரும்பான்மை கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று தோ்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →