முடங்கியது ஐஆர்சிடிசி இணையதளம்: தட்கல் டிக்கெட் எடுப்பதில் சிக்கல்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளமும், கைப்பேசி செயலியும் முடங்கியது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளமும், கைப்பேசி செயலியும் முடங்கியது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, பயணிகள் ஆஸ்க் திஷா வாய்ப்பைப் பயன்படுத்தி டிக்கெட் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் இ-வால்லெட் என்ற வசதியையும் பயணிகள் பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம், இதற்கு பயனாளர்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை செலுத்தி உள்நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தற்போதைய நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும், தொழில்நுட்பு வல்லுநர்கள் பிரச்னையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களில், தட்கல் டிக்கெட் முறையில் நாளை ரயில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யக் காத்திருக்கும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.