முகப்பு
இந்தியா

ஓயோ நிறுவனரின் தந்தை 20-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை குருகிராமில் 20-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா

ஓயோ நிறுவனரின் தந்தை 20-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை குருகிராமில் 20-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை குருகிராமில் 20-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் பிரசாத் அகர்வால். இவர் இன்று ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள 20 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்ததாவது, குருகிராமில் அமைந்துள்ள டிஎல்எஃப் அடுக்குமாடி குடியிருப்பின் 20 வது மாடியில் இருந்து மதியம் 1 மணியளவில் நபர் ஒருவர் விழுந்ததாக தகவல் கிடைத்தது.

உடனடியாக காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். விசாரணையில், விழுந்த நபர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் என அடையாளம் காணப்பட்டது. அவரது சடலத்லை மீட்டு பராஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வுக்குப் பிறகு அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனது தந்தை ரமேஷ் அகர்வால் மார்ச் 10 அன்று காலமானார். அவர் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்தார், ஒவ்வொரு நாளும் என்னையும் நம்மில் பலரையும் ஊக்கப்படுத்தினார். அவரது மரணம் எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். கடந்த 7ஆம் தேதிதான் ரித்தேஷ் அகர்வாலின் திருமணம் தில்லயில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இதில் ரமேஷ் அகர்வாலும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →