முகப்பு
இந்தியா

தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே மோதல்! பலர் படுகாயம்

ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Updated On : 6 செப்டம்பர், 2023 at 12:42 PM
தெலுங்கு தேசம் கட்சி பேரணி (கோப்புப்படம்)
பகிர்:

ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆந்திரத்தில் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷின் பேரணி நடைபெற்றது. 

அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாரா லோகேஷ் கோஷம் எழுப்பியதுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமைத்திருந்த பேனர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. 

Advertisement

மேலும் அங்கிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. 

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவலர் உள்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.