தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே மோதல்! பலர் படுகாயம்
ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷின் பேரணி நடைபெற்றது.
அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாரா லோகேஷ் கோஷம் எழுப்பியதுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமைத்திருந்த பேனர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதையும் படிக்க | செப்.13ல் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்!
மேலும் அங்கிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவலர் உள்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.