இந்தியா

ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து: பிரதமர் மோடி உறுதி

DIN

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விரைவில் கிடைக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்.

நீங்கள், உங்கள் கனவுகளை உங்கள் எம்.எல்.ஏ மற்றும் உங்கள் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். கடந்த 60 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரசனைகளில் இருந்து விடுவிப்பேன். கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் முற்றிலும் மாறியதால் எனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்.

ஜம்மு-காஷ்மீரில் வரும் மக்களவைத் தேர்தல் எவ்வித அசம்பாவித சம்பவங்களின்றி நடத்தப்படும். நாடு எதிர்கொள்ளும் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளக் கூடிய வலுவான அரசை மத்தியில் வழங்குவதற்காகவே எதிர்வரும் தேர்தல் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிதுனம்

அமித் ஷாவால் பிரதமராக முடியாது! -தில்லி முதல்வர் கேஜரிவால்

ரிஷபம்

மேஷம்

ஆம்பூரில் ஹவாலா பணம் ரூ.17 லட்சம் பறிமுதல்?

SCROLL FOR NEXT